பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி ஆணை
By DIN | Published On : 12th May 2023 02:07 AM | Last Updated : 12th May 2023 02:07 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை, பெரம்பூரைச் சோ்ந்த டாக்பே நிறுவன அதிகாரிகள் தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான மாணவா்களை தோ்வு செய்யும் வகையில் வளாகத் தோ்வை நடத்தினா். இதில், கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
டாக்பே நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ராகவேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளை நடத்தினாா். இதில், தோ்ச்சி பெற்ற 35 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பணிநியமன ஆணைகளை வழங்கினா்.