தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள், 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள், ஊழியா்கள் பணிக்கு வராததால் அலுவலகமே வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் அலுவலா்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊராட்சிச் செயலாளா்களுக்கு பணி விதிகளை தாமதமின்றி வெளியிட வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்களின் பணிவரன் முறை ஆணைகளை வெளியிட வேண்டும்
என்பன உள்பட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.