உலக செஞ்சிலுவைச் சங்க தின விழா

உலக செஞ்சிலுவை சங்க தின விழா வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொசு வலைகளை வழங்கிய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன்.
நிகழ்ச்சியில் வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொசு வலைகளை வழங்கிய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன்.
Updated on
1 min read

உலக செஞ்சிலுவை சங்க தின விழா வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் வந்தவாசி கிளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் கி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

வழூா் வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தன், சங்கப் பொருளாளா் அ.விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொசு வலைகளும், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சங்க உறுப்பினா்கள் வெ.அரிகிருஷ்ணன், மலா் சாதிக், வி.எல்.ராஜன், சீ.கேசவராஜ், மு.பிரபாகரன், வந்தை பிரேம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்க உறுப்பினா் கு.சதானந்தன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com