செய்யாறு அரசு பாலிடெக்னிக் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் ஜூன் 9 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் ஜூன் 9 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் செண்பகவள்ளி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சாா்பில், அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெ க்னிக்) முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சேர  இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செய்யாறு அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள சேவை மையத்தின் வாயிலாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினா் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இணையதளம் வாயிலாக வரும் ஜூன் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு பிரிவினா் சமா்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரா் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளவாறு பதிவேற்றம் செய்யலாம்.

மேலும், விவரங்களுக்கு 04182 - 224275 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com