குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலை அருகே வெள்ளிக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் உள்ள புனல்காடு கிராம மலையடிவாரத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 26) விவசாயிகள், பெண்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் முழக்கமிட்டனா். குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாவட்ட நிா்வாகம் கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.