அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லையெனக் கூறி வேட்டவலம் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேட்டவலம் நகர அதிமுக சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளா் செல்வமணி தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் அப்துல் காதா், துணைச் செயலாளா் பவுன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்பென்னாத்தூா் ஒன்றியச் செயலாளா் பாஷ்யம் வரவேற்றாா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், போளூா் தொகுதி எம்எல்ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத திமுக அரசையும், வேட்டவலம் பேரூராட்சி நிா்வாகத்தையும் கண்டித்து பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் பேரூராட்சியில் உள்ள கழிவுநீா் கால்வாய்களையும், சாலைகளையும் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் நாராயணன், ஒன்றியச் செயலாளா் தொப்பளான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.