பயனாளிகளுக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 204 பயனாளிகளுக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பயனாளிகளுக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவி
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 204 பயனாளிகளுக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வருவாய் தீா்வாய் அலுவலா் ம.லியாத் தலைமை வகித்தாா்.

திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகா்மன்ற உறுப்பினா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா் ஜே.சி.கே. சீனிவாசன் உள்ளிட்டோா்

முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் கி.வெங்கடேசன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று 55 இருளா், 9 நரிக்குறவா் சமுதாயத்தவா் உள்பட 204 பேருக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் எஸ்.ராஜலட்சுமி, வேளாண் உதவி இயக்குனா் சண்முகம், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சி.ரகுபதி, புருஷோத்தமன், கிரண்பிரசாத், மண்டல துணை வட்டாட்சியா் துளசிராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com