சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு
By DIN | Published On : 15th November 2023 04:13 AM | Last Updated : 15th November 2023 04:13 AM | அ+அ அ- |

செய்யாறு: செய்யாறு அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
செய்யாறு வைத்தியா் தெருவைச் சோ்ந்த கோபு மகன் அரிபிரகாஷ் (29), காா் ஒட்டுநா்.
இவா், திங்கள்கிழமை இரவு பாரிநகா் பகுதியில் இருந்து செய்யாற்றில் உள்ள தனது வீட்டுக்கு இரு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்தாா்.
செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்ட அரிபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று அரிபிரகாஷின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...