திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (நவ.16) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை கிழக்கு மின்வாரிய கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (நவ.16) காலை 10 மணிக்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.