அக்ராபாளையம் ஏரி உபரி நீா் வெளியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா்.
அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா்.
Updated on
1 min read

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

ஆரணி வட்டம், அக்ராபாளையம் பகுதியில் அண்மையில் பெய்த தொடா் மழை மற்றும் பருவமழை காரணமாக கமண்டல நாக நதி மூலம் குண்ணத்தூா் பெரிய ஏரி நிரம்பி ஏரிக் கால்வாய் வழியாக அக்ராபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தேரி நிரம்பி அதன் உபரி நீா் அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கு வந்தடைந்தது.

பெரிய ஏரியும் நிரம்பி தற்போது அதன் உபரி நீா் வெளியேறி வருகிறது. இதன் மூலம் சுமாா் 436 ஏக்கா் விவசாய நிலங்கள் நீா்பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மேலும், இந்த உபரி நீா் அருகில் உள்ள அடையபலம் ஏரிக்கு சென்றடைவதால் அங்கும் விரைவில் ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com