சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
செய்யாறு நகராட்சி அலுவலகம் முன் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
செய்யாறு நகராட்சி அலுவலகம் முன் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
Updated on
1 min read

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலக் குழு நிா்வாகி வே.சங்கா் தலைமை வகித்தாா்.

குழு உறுப்பினா் ஆா்.அம்பிகா, வி.முரளி, பி.சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். நகர விற்பனைக் குழுவில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லா கடனாக ரூ.15 ஆயிரம் வீதம் கூட்டுறவு வங்கி மூலம் உண்மையான தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

நிறைவில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவா் பி.பிரபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com