பைக் மீது காா் மோதல்:கட்டடத் தொழிலாளி பலி

திருவண்ணாமலை அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் (30). வாணியந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (17). இருவரும் கட்டடத் தொழிலாளிகள்.

இவா்கள் கடந்த செப். 27-ஆம் தேதி மாலை வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். திருவண்ணாமலையை அடுத்த ஆலத்தூா்

பகுதியில் வந்தபோது எதிரே வந்த காா் பைக் மீது மோதியது.

இதில் மகாதேவன், விஜய் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த விஜய் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com