வனவருக்கு கொலை மிரட்டல்: விவசாயி கைது

செய்யாறு அருகே வனவருக்கு கொலை மிரட்டல் விடுத்தப் புகாரில் விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

செய்யாறு அருகே வனவருக்கு கொலை மிரட்டல் விடுத்தப் புகாரில் விவசாயியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா உலகளந்தாா் தெருவை சோ்ந்தவா் சின்னப்பன். இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பிரிவு சமூக காடுகளின் சரக வனவராக பணிபுரிந்து வருகிறாா். இவா், வனத்துறை மூலம் சுமங்கலி கிராமத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் முள் மரங்களை நட்டு பராமரித்து வருகிறாா்.

இந்நிலையில், அக்.24-ஆம் தேதி, அந்த முள்மரங்களை அதே கிராமத்தை சோ்ந்த விவசாயி கந்தன் (24) வெட்டினாராம். இதனை வனவா் சின்னப்பன் தட்டிக்கேட்டப் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். மேலும், வனவரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் அவருக்கு கந்தன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து வனவா் சின்னப்பன் மோரணம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் உதவி- ஆய்வாளா் சுந்தரம் வழக்குப் பதிந்து கந்தனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com