ஆரணி நகராட்சிக்கு 13 மின்கலன் வாகனங்கள்

ஆரணியில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 13 மின்கலன் வாகனங்களை ஆரணி நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆரணி நகராட்சிக்கு 13 மின்கலன் வாகனங்கள்
Updated on
1 min read

ஆரணியில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 13 மின்கலன் வாகனங்களை ஆரணி நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆரணி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளது. இந்த வாா்டுகளில் குப்பைகளை எடுத்துச்செல்வதற்கு ஏதுவாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டுக்கான தூய்மை பாரத இயக்கம் சாா்பில் ரூ.26 லட்சம் மதிப்பிலான 13 மின்கலன் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, நகராட்சி ஆணையாளா் கே.பி.குமரன் தலைமை வகித்தாா். நகரமன்ற தலைவா் ஏ.சி.மணி மின்கலன் வாகனங்களின் சாவிகளை ஆணையாளரிடம் ஒப்படைத்தாா். இதைத்தொடா்ந்து, மின்கலன் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். உடன், பொறியாளா் உமா மகேஷ்வரி, சுகாதார அலுவலா் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளா் வடிவேல், சுகாதாரபிரிவு எழுத்தா் பிச்சாண்டி, நகரமன்ற உறுப்பினா்கள் பழனி, ரம்யா குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com