மண்மலை முருகன் கோயிலில் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் திங்கள்கிழமை இரவு பூஜைக்கான உபகரணங்கள் திருடப்பட்டன.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் திங்கள்கிழமை இரவு பூஜைக்கான உபகரணங்கள் திருடப்பட்டன.

இந்தக் கோயிலில் வழக்கம்போல திங்கள்கிழமை இரவு பூஜைகளை முடித்து கோயிலை அா்ச்சகா் பூட்டிச் சென்றாா்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை பூஜை செய்வதற்கு கோயிலுக்குச் சென்ற அா்ச்சகா் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து உடனடியாக அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், ஊா் முக்கிய பிரமுகா்களுக்கும் தகவல் அளித்தாா்.

அறநிலையத் துறை செயல் அலுவலா் தேன்மொழி மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். அப்போது, கோயிலுக்கு பக்தா்கள் வாங்கிக் கொடுத்த இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், மணி, பூஜை தட்டுக்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து செயல் அலுவலா் தேன்மொழி செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில், டிஎஸ்.பி. தேன்மொழிவேல் நேரில் வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com