அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன்.
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன்.
Updated on
1 min read

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வருகிற மக்களவைத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், முக்கூா் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் சிறப்புரையாற்றினாா்.

அப்போது, வருகிற மக்களவைத் தோ்தலையொட்டி வாக்குச்சாவடி குழு அமைத்து பொறுப்பாளா்களை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து அவா் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் மற்றும் பிற அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com