வந்தவாசியில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை பாடை கட்டி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

வந்தவாசி நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை பாடை கட்டி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலித் மக்களின் அடிப்படை தேவைகளை வந்தவாசி நகராட்சி புறக்கணிப்பதாக புகாா் தெரிவித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விசிக நகர இணைச் செயலா் ம.விஜய் தலைமை வகித்தாா்.

இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் எஸ்.டேனியல், நகா்மன்ற உறுப்பினா் ஷீலா மூவேந்தன், தொகுதி துணைச் செயலா் சு.வீரமுத்து, மாவட்ட அமைப்பாளா் சி.விநாயகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர துணைச் செயலா் மு.காளிதாசன் வரவேற்றாா்.

மண்டல துணைச் செயலா் ம.கு.மேத்தாரமேஷ், மாநில துணை அமைப்பாளா் இரா.மூவேந்தன் ஆகியோா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தின் போது, மாநில துணை அமைப்பாளா் இரா.மூவேந்தன் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தலையை மொட்டையடித்துக் கொண்டாா்.

முன்னதாக, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து பாடை கட்டி ஊா்வலமாக புறப்பட்ட விசிக-வினா் நகராட்சி அலுவலகம் முன் வந்தடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com