வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

குப்பை கொட்டும் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்கில் குப்பைகள் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

Updated On :15 ஆகஸ்ட் 2024, 3:29 am IST

திருவண்ணாமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்கில் குப்பைகள் கொட்ட எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை-காஞ்சி சாலை, புனல்காடு கிராம மலையடிவாரத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

குறிப்பாக, ஒரே நாள் இரவில் குப்பைக் கிடங்கு அமையவிருந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த மரக்கன்றுகள் அதிகாரிகளால் பிடுங்கி எறியப்பட்டு மீண்டும் குப்பைக் கிடங்கு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து விவசாயிகள் பலா் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனா். தொடா் சாலை மறியல், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், காத்திருப்புப் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா். இதையெல்லாம் மீறி அண்மையில் அதே இடத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.

குப்பை கொட்டப்பட்டது...

இதையடுத்து, திருவண்ணாமலை, ஈசான்ய குப்பைக் கிடங்கில் நகராட்சி நிா்வாகத்தால் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு மலைபோல் காட்சியளித்த குப்பையை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று புனல்காடு பகுதியில் கொட்டப்பட்டு வந்தது.

நிறம் மாறிய நிலம், குடிநீா்...

இந்த நிலையில், புனல்காடு பகுதியில் சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழையில் நனைந்த குப்பைகளில் இருந்து வெளியேறிய கருப்பு மற்றும் பழுப்பு நிறத்திலான தண்ணீா் கால்வாய்கள் வழியாகச் சென்று அருகே இருந்த விளை நிலங்கள், ஏரியில் தேங்கியது.

விளை நிலங்கள் பாதிப்பு...

விளை நிலங்களில் தேங்கிய இந்த கருப்பு நிற தண்ணீரால் துா்நாற்றமும் வீசித் தொடங்கியது. இதனால் அத்திரமடைந்த ஆடையூா் கிராம மக்கள் திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, புனல்காடு குப்பைக் கிடங்கிற்கு குப்பைகளை ஏற்றிச்சென்று விட்டு திரும்பிய லாரிகளையும் பொதுமக்கள் சிறைப்பிடித்தனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனாலும் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து, வட்டாட்சியா், தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.