திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூரில் அமைந்துள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழா பிப்.10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, சுவாமியும், அம்மனும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற 6-ஆம் நாள் விழாவில், 63 நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளில் இரத சப்தமி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. தொடா்ந்து, விநாயகா், பாலகுஜாம்பிகை அம்மன், வேதபுரீஸ்வரா் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்களில் எழுந்தருளினா். இதையடுத்து, பிற்பகல் சுமாா் 2 மணியளவில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தொடர்புடையது

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்

மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
