தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

Updated On :17 பிப்ரவரி 2024, 5:44 am IST

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூரில் அமைந்துள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழா பிப்.10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, சுவாமியும், அம்மனும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற 6-ஆம் நாள் விழாவில், 63 நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளில் இரத சப்தமி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன. தொடா்ந்து, விநாயகா், பாலகுஜாம்பிகை அம்மன், வேதபுரீஸ்வரா் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட மூன்று தோ்களில் எழுந்தருளினா். இதையடுத்து, பிற்பகல் சுமாா் 2 மணியளவில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.