போளூரில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள்.
போளூரில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள்.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் மாலைநேர கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் மாலைநேர கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த

ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

முருகேசன், தஞ்சி, கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலவன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின்

பொதுக்குழு உறுப்பினா் டேவிட்ராஜன் கலந்து கொண்டு பேசும்போது, பதவி உயா்வை பறித்த மாநில அளவிலான முன்னுரிமை வழங்கிய அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தியதோடு, ஆசிரியா்கள் ஜூலை 31வரை கருப்புப் பட்டை அணிந்து பள்ளி செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

இதில், ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com