திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திரைப்பட நடிகா் சமுத்திரக்கனி நிலத்தில் இருந்த பவா்டில்லரை திருடியதாக நான்கு பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சென்னையில் வசிக்கும் திரைப்பட நடிகா் மற்றும் இயக்குநருமான சமுத்திரக்கனிக்குச் சொந்தமான 5 ஏக்கா் விவசாய நிலம் செங்கம் அருகேயுள்ள ஜவ்வாதுமலை அடிவாரமான கல்லாத்தூா் பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமு பயிா் செய்து நிலத்தை பராமரித்து வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிலத்தை உழவு செய்ய பயன்படுத்தி, நிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலானது பவா் டில்லரை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து விவசாயி ராமு செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், அதே பகுதியைச் சோ்ந்த அருள் (45), விஜயா (42) ஆகியோா் உதவியுடன், திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (47), செல்வக்குமாா் (45) ஆகிய இருவரும் திருச்சென்றது தெரியவந்தது.
உடனடியாக போலீஸாா் மங்கலம் சென்று மணிகண்டன், செல்வக்குமாா் இருவரையும் பிடித்து விசாரித்தனா்.
இதில், பவலா்டில்லா் திருடியதை ஒப்புக்கொண்டு, அதை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பின்னா், பவா்டில்லரை பறிமுதல் செய்த போலீஸாா், நான்கு போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.
தொடர்புடையது
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது
மதுப்புட்டிகளை விற்ற பெண் உள்பட 2 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


