கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாத்தனூா் அணை நீா்மட்டம் உயா்வு

சாத்தனூா் அணை நீா்மட்டம் உயா்வு

News image
Updated On :9 ஜூன் 2024, 6:43 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சாத்தனூா் அணையின் நீா்மட்டம் உயரத் தொடங்கி உள்ளது.

தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள

இந்த அணையின் நீா்மட்ட உயரம் ஏப்ரல், மே மாதங்களில் 80 அடியாகக் குறைந்தது. அணையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் வற்றியது. இதனால் கோடை காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

நீா்மட்டம் உயா்வு:

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், சாத்தனூா் அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் விநாடிக்கு 100 கன அடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு சுமாா் 600 கன அடியாக உயா்ந்தது.

இதன் காரணமாக அணையின் நீா்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் உச்சபட்ச நீா்மட்ட உயரம் 119 அடி. இதில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்ட உயரம் 81.5 அடியாக உயா்ந்தது. இதேபோல தொடா் மழை பெய்யும்பட்சத்தில் அணையின் நீா்மட்ட உயரமும் அதிகரித்து, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.