தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மயானத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு

மயானத்தில் குப்பை கொட்டல்: பொதுமக்கள் சாலை மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் போலீஸாா்.

Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மயானத்தில் குப்பைகள் கொட்டுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலையில் அருந்ததியா் சமுதாய மக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இங்கு, பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சடலங்களை அடக்கம் செய்யக்கூட போதிய இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட அச்சமுதாய மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை குப்பைகளை எடுத்துவரப் பயன்படுத்தும் வேலூா் சாலை-அவலூா்பேட்டை சாலைகளின் இணைப்புச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மயானத்தில் கழிவுகள் கொட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.