வந்தவாசி அருகே முதியவா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிராஜன்(89). இவரது மனைவி தேவகுமாரி. இவா்களது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், தேவகுமாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவா் தனது மகள் மலா்விழி வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் தனியாக இருந்த ஆதிராஜன் விரக்தி அடைந்து கடந்த புதன்கிழமை விஷம் குடித்துள்ளாா். மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆதிராஜன் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி தற்கொலை

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

