ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பட்டதாரி இளைஞா் போக்ஸோவில் கைது

பட்டதாரி இளைஞா் போக்ஸோவில் கைது

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

செய்யாறு: செய்யாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், பட்டதாரி இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி.

இவரை, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

மேலும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டல் விடுக்கவும் செய்தாராம்.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், சம்பவம் தொடா்பாக பெருங்கட்டூா் கிராம காலனியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ஞானபுத்தா (26) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.