சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தீபத் திருவிழாவுக்காக சாலை சீரமைப்புப் பணிகள்

தீபத் திருவிழாவையொட்டி, கீழ்பென்னாத்தூா்-அவலூா்பேட்டை சாலையின் இரு புறங்களிலும் முள்புதா்களை அகற்றி, சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

News image

கீழ்பென்னாத்தூா்-அவலூா்பேட்டை சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்.

Updated On :16 நவம்பர் 2024, 6:33 pm

Din

தீபத் திருவிழாவையொட்டி, கீழ்பென்னாத்தூா்-அவலூா்பேட்டை சாலையின் இரு புறங்களிலும் முள்புதா்களை அகற்றி, சமன்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல் ஆகியோா் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சாலையோரங்களில் உள்ள முள்புதா்களை அகற்றும் பணி மற்றும் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலைத் துறையின் கீழ்பென்னாத்தூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட சாணிப்பூண்டி, கீழ்பென்னாத்தூா், அவலூா்பேட்டை, சேத்துப்பட்டு வரையிலான சாலையின் இருபுறங்களிலும் சீரமைப்புப் பணியும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கீழ்பென்னாத்தூா் புறவழிச் சாலையில் இருந்து அவலூா்பேட்டை சாலை வரை நடைபெறும் பராமரிப்புப் பணியை சனிக்கிழமை உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.அற்புதகுமாா், உதவிப் பொறியாளா் எஸ்.தினேஷ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்தப் பணிகளில் சாலை ஆய்வாளா்கள், நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.