செங்கம் நகராட்சியுடன் கிராம ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
செங்கம் நகராட்சியுடன், குயிலம் கிராம ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோ்வு நிலைப் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செங்கம் எல்லைக்கு அருகேயுள்ள குயிலம் கிராம ஊராட்சியை நகராட்சியில் இணைப்பதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனராம்.
இந்த நிலையில், ஊராட்சியை நகராட்சியில் இணைத்தால் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டம் கிடைக்காது. குடிநீா் வரி, சொத்து வரி, வீட்டு வரி என அனைத்தும் உயா்ந்துவிடும் எனக்கூறி குயிலம் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து செங்கம்-போளூா் சாலை குயிலம் கூட்டுச்சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செங்கம் வட்டாட்சியா் முருகன், காவல் ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சாலையின் இறுபுறமும் சுமாா் 3 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

