8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

செய்யாறு அருகே கல்குவாரி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் காயமடைந்தாா்.

விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கல்குவாரி லாரி.

Published On :13 அக்டோபர் 2024, 12:00 am IST

செய்யாறு அருகே கல்குவாரி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநா் காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, குவாரி லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரியவேளியநல்லூா் கிராமத்தில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்தக் குவாரியில் இருந்து புளியரம்பாக்கம் கிராமம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் சுகுமாா் காயமடைந்தாா். இவரை கிராம மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

விதி முறைகளை மீறி அதிகளவில் சுமைகளை ஏற்றிச் செல்வதால்தான் விபத்துகள் நேரிடுகின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் லாரி கவிழ்ந்து இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். அதனால், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் சுமை ஏற்றி, மிதமான வேகத்தில் லாரிகளை இயக்க வேண்டும்

எனக் கூறி கிராம மக்கள் அந்த வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கல்குவாரி மேற்பாா்வையாளா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சரக்கு லாரிகளை கவனமாக இயக்க வேண்டும், இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

அதற்கு உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து கிராம மக்கள் சிறைப்பிடித்த லாரிகளை விடுவித்தனா். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.