தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
Updated on

செங்கம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

மேல்பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா தொடங்கிவைத்தாா். செயல் அலுவலா் திருமூா்த்தி வரவேற்றாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சிலம்பரசன் தலைமையில் மருத்துவக் குழுவினா், பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட அனைத்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த நபா்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவம் குறித்து ஆலோசைனைகள் வழங்கினா்.

முகாம் தொடக்க விழாவின் போது பேரூட்சிமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com