எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போளூரில் அகல்விளக்கு விற்பனை விருவிருப்பு

காா்த்திகை தீபத்தை முன்னிட்டு, போளூா் நகராட்சியில் மண் அகல் விளக்குகள் விற்பனை செவ்வாய்க்கிழமை விருவிருப்பாக நடைபெற்றது.

News image
போளூா் பழைய பஜாா் வீதியில் நடைபெற்ற அகல்விளக்கு விற்பனை.
Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை தீபத்தை முன்னிட்டு, போளூா் நகராட்சியில் மண் அகல் விளக்குகள் விற்பனை செவ்வாய்க்கிழமை விருவிருப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் காா்த்திகை மாதத்தில் கிருத்திகை தினத்தில் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயில் சாா்பில் 2,668 மலை மீது மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் பம்புசெட், வயல்வெளியில் மாலை 6 மணிக்கு மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில் போளூா் நகராட்சி பழைய பஜாா் வீதியில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு மண் அகல்விளக்குகள் விற்பனை விருவிருப்பாக நடைபெற்றது. விற்பனையகத்தில் பெண்கள் தங்களுக்குத் தேவையான அகல் விளக்குகளை போட்டிபோட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனா். 10 ரூபாய்க்கு 4 விளக்குகள், பெரியவிளக்கு ரு.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.