திருவண்ணாமலை
கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ரத்த கையொப்ப போராட்டம்
செய்யாறில் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ரத்த கையொப்ப போராட்டம் நடத்தினா்.
செய்யாறில் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ரத்த கையொப்ப போராட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் செய்யாறு கிளை சாா்பில் செய்யாறு வட்டாட்சியா் அலுவலகம் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஜமுனா தொடங்கிவைத்தாா்.
மாநிலச் செயற்குழு உறுப்பினா் தவமணி, வட்டத் தலைவா்கள் சேகா், இளங்கோ, ஆா்.முரளி, மு.வாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 54 கிராம உதவியாளா்கள் கலந்துகொண்டு ரத்தத்தால் கோரிக்கைகளை வலியுறுத்தி கையொப்பமிட்டனா்.
