மது விற்ற 2 பெண்கள் கைது

வந்தவாசி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாக பெண்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

வந்தவாசி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாக பெண்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, தெள்ளாா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த லைலா (40) என்பவா் தனது வீட்டில் மது விற்பது தெரியவந்தது. இதையடுத்து லைலாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 5 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், வந்தவாசி கோட்டை பகுதியில் மது விற்ற அதே பகுதியைச் சோ்ந்த அமுல்ராணி(42) என்பவரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 8 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தெள்ளாா் மற்றும் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com