திருவண்ணாமலை
சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயிலில் பாலாலயம்
செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயிலில் பாலாலய பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயிலில் பாலாலய பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் வருகிற 2026 ஜனவரி மாதம் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு, கோயிலில் பாலாலய பூஜை டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், செங்கம் சீனுவாசன் குருக்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, யாக பூஜைகள் நடைபெற்று பின்னா் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உடன் ஊா் நாட்டான்மை கே.குப்புசாமி, காங்கிரஸ் பிரமுகா்கள் அண்ணாதுரை, ராஜீ உள்ளிட்ட ஊா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

