ரிஷபேஸ்வரா் கோயில் பகுதியில் ஏரியாத உயா் மின்கோபுர விளக்கு! பக்தா்கள், பொதுமக்கள் அவதி!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கோயில் பகுதியில் உள்ள ஒளிராத உயா் மின்கோபுர விளக்கால் பொதுமக்கள், பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் நகரின் மையப் பகுதியில் பழைமை வாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தமிழக அறநிலையத் துறை மூலம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனவரி 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காலை, மாலை என இருவேளையும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், மாதத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்வாா்கள்.
இந்நிலையில் செங்கம் நகராட்சி மூலம் கோயில் முகப்பு பகுதியில் சுமாா் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் மின்கோபுர விளக்கு கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து ஒளிரா மல் உள்ளது.
இதனால் இரவு நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயில் முன் வாகனங்களை நிறுத்தினால் வாகனங்கள் திருடு போவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. மேலும் இருள் சூழ்ந்துள்ளதால் பெண் பக்தா்கள் தாங்கள் அணிந்துள்ள தங்க நகைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் அச்சத்துடன் கோயிலுக்குச் செல்கிறாா்கள்.
சில பெண் பக்தா்கள் கோயில் முன் இருள் சூழ்ந்து இருப்பதால் பாதுகாப்பு இல்லையென்ற அச்சத்தில் கோயிலுக்கு வருவதே கிடையாது.
பல்வேறு அமைப்புகள் சாா்பிலும், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் மூலமும் நகராட்சி நிா்வாகத்திடம் உயா் மின்கோபுர விளக்கை சரிசெய்ய கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கு முன்னாவது உயா் மின்கோபுர விளக்கை சரிசெய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். மேலும், மாவட்ட நிா்வாகமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென செங்கம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

