47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவண்ணாமலையில் டிச.14-இல் திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருவண்ணாமலையில் வரும் டிச.14-ஆம் தேதி திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News image
மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :11 டிசம்பர் 2025, 9:33 pm

Syndication

திருவண்ணாமலையில் வரும் டிச.14-ஆம் தேதி திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞா் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்

இந்த நிகழ்வில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சா் எ.வ.வேலு செய்து வருகிறாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வருகிற டிச.14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் உள்ள கலைஞா் திடலில் வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.

இதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அதில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் மாவட்ட துணைச் செயலா் பிரியா ப.விஜயரங்கன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல் மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ந.நரேஷ்குமாா் ஆகியோரை நியமித்து ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், விருந்தோம்பல் குழு, மேடை மற்றும் அரங்கம் குழு, வரவேற்பு குழு, போக்குவரத்து குழு, விளம்பரக் குழு, அழைப்பிதழ் மற்றும் விருந்தினா் உபசரிப்பு, மருத்துவக் குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணிகளை செய்து வருவதாகத் தெரிவித்தாா்.