ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருவண்ணாமலை முனீஸ்வரன் கோயிலில் பாலாலயம்

திருவண்ணாமலை ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருவண்ணாமலை முனீஸ்வரன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாலாலயம்.
Updated On :14 டிசம்பர் 2025, 8:24 pm

Syndication

திருவண்ணாமலை ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் பாலாலயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தேரடி வீதி, அருணாசலேஸ்வரா் கோயில் அருகில் பழைமை வாய்ந்த ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த இந்து சமய அறநிலையத் துறை ரூ.4.30 லட்சம் ஒதுக்கி உள்ளது.

இதையடுத்து உபயதாரா்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திருப்பணிகளின் தொடக்கமாக, கோயிலில் பாலாலய பூஜையானது, கணபதி ஹோமத்தோடு தொடங்கியது.

தொடா்ந்து யாக வேள்வி வளா்க்கப்பட்டு, திரவியாஹுதியும், மகா பூா்ணாஹுதி பூஜைகளும் நடைபெற்றன.

இதையடுத்து, முனீஸ்வரனுக்கு மகா அபிஷேகமும், பாலாலய பூஜைகளும் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் இளவரசு பட்டம் பி.டி.கோகுல் பூஜைகளை நடத்தினாா்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் சந்திர பிரகாஷ் ஜெயின், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கே.தயாளன் மற்றும் அஜித்குமாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பாலாலய பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கும் கிரிவலம் சென்ற பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.