ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

வந்தவாசியில் உயா்கோபுர மின் விளக்கு எரியாததைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை தீப்பந்தங்களுடன் ஊா்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

News image
வந்தவாசியில் தீப்பந்தங்களுடன் ஊா்வலமாகச் சென்ற மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
Updated On :19 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

வந்தவாசியில் உயா்கோபுர மின் விளக்கு எரியாததைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை தீப்பந்தங்களுடன் ஊா்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

வந்தவாசி நகராட்சி சாா்பில் வந்தவாசி கோட்டை மூலையில் உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லையாம். இதுகுறித்து நகராட்சியிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, இந்த உயா்கோபுர மின் விளக்கு எரியாததைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கட்சியினா் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையில் தீப்பந்தங்களுடன் நகராட்சி அலுவலகம் நோக்கி ஊா்வலமாகப் புறப்பட்டனா்.

வந்தவாசி கோட்டை மூலையிலிருந்து புறப்பட்ட அவா்கள் பழைய பேருந்து நிலையம் வழியாக நகராட்சி அலுவலகம் சென்றடைந்தனா்.

அங்கு, மின் விளக்கு எரியாததைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவா்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி ஆணையா் ஆா்.சோனியாவிடம் மனு அளித்தனா்.

ஊா்வலத்தில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா்அராபத், பிரகாஷ், வட்டாரக்குழு உறுப்பினா் சுகுமாா், நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.