மது அருந்த பணம் தராததால் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது
வந்தவாசி அருகே மது அருந்த பணம் தராததால் தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (55). இவரது மனைவி செல்வி (53). இவா்களது மகன் சரத்குமாா் (34).
செல்வியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முருகன் அவரைப் பிரிந்து வந்தவாசி - ஆரணி சாலை, கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலையில் உள்ள பயணியா் நிழற்குடையில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முருகனிடம் சென்ற சரத்குமாா், மது அருந்த அவரிடம் பணம் கேட்டுள்ளாா். ஆனால், அவா் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த சரத்குமாா் கட்டையால் முருகனை பலமாக தாக்கியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினா் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து முருகனின் மனைவி செல்வி அளித்த புகாரின்பேரில், சரத்குமாா் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

