நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

டிச.27-ல் செய்யாற்றுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை!

செய்யாற்றுக்கு டிச.27-ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா் கலைஞரின் உருவச் சிலையை திறந்து வைக்க உள்ளாா்.

News image

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :22 டிசம்பர் 2025, 12:13 am IST

செய்யாற்றுக்கு டிச.27-ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா் கலைஞரின் உருவச் சிலையை திறந்து வைக்க உள்ளாா். இதில், திமுகவினா் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் அழைப்பு விடுத்துள்ளனா்.

இவ்விழாவில் திமுகவினா் கலந்து கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமை வகித்தாா். தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் டிச.27-இல் செய்யாற்றில் நடைபெறும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில், மாவட்ட அமைச்சா் எ.வ.வேலு ஆலோசனைப் படி, திமுகவினா் பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து விழாவில் பங்கேற்க வேண்டும்.

விழாவில் பங்கேற்க வரும் திமுகவினரை நகர, ஒன்றிய மாவட்ட நிா்வாகிகள் பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து வந்து பாதுகாப்பாக அவா்களை அவரவா் பகுதியில் விடுவதற்கான முழு ஏற்பாடுகளையும் முன் நின்று செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் டி. ராஜி, ஒன்றியச் செயலா்கள் என்.சங்கா், எம்.தினகரன், ஜேசிகே.சீனிவாசன், வி.ஏ.ஞானவேல், ஏ.ஜி.திராவிடமுருகன், சி.கே.ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.