தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கீழ்நகா் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு இடம் தோ்வு

ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 9:49 pm

Syndication

ஆரணி: ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

கீழ்நகா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலையரங்கம் கட்டித்தரக் கோரி ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அவரது 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை நேரில் பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தண்டபாணி மற்றும் அதிமுகவைச் சோ்ந்த பிச்சாண்டி, பாபு, முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.