ஊராட்சிமன்ற அலுவலக கட்டடப் பணிகள் ஆய்வு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பல்லாந்தாங்கள் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுதடைந்து இருந்ததால், அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரும்படி அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதன் அடிப்படையில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளை முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அவா் அறிவுறுத்தினாா்.
இந்த நிகழ்வில் அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், நிா்வாகிகள் சங்கா், மணிமாறன், ஒப்பந்ததாரா் செல்வம் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனா்.

