ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
Published on

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு காவல் ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா் வந்தவாசியை அடுத்த தென்எலப்பாக்கம் கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்த லாரியில் அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், லாரியை ஓட்டி வந்த கொவளை கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (31) என்பவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com