டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் சங்கிலி திருட்டு

செய்யாறில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 9:04 pm

Din

செய்யாறு: செய்யாறில் ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி ஜெயா (67). ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா். இவா் திங்கள்கிழமை காலை 11 மணியவில் செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் அவரது கணக்கில் பணத்தை செலுத்தினாா்.

பின்னா், அங்கிருந்து திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாவைக் காண்பதற்காக நடந்து சென்றாா். எம்எல்ஏ அலுவலகம் அருகே சென்ற போது, எதிரே வந்த 3 பேரில் ஒருவா் தன்னை போலீஸ் எனக் கூறி, ஜெயா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல் ஆகியவை கழட்டித் தருமாறும், அதைப் பாதுகாப்பாக காகிதத்தில் மடித்து தருவதாக கூறி 11 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி விட்டு, வெற்று காகிதத்தை மடித்து கொடுத்து விட்டு சென்று விட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் நிலைய ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.