திருவண்ணாமலை
சிவாலயங்களில் ஐப்பசி மாத சோம வார பிரதோஷம் வழிபாடு
ஆரணி, போளூா், வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி மாத சோம வார பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், 500 லிட்டா் தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், 108 கிலோ விபூதி, 1,500 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து,
பல்வேறு மலா்களால் ஆன மாலை அணிவித்து ஆராதனை நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த
ஆயிரக்கணக்கான பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.

