மக்கள் குறைதீா் கூட்டங்களில் 760 கோரிக்கை மனுக்கள்
ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 760 மனுக்கள் வரப்பெற்றன.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.
பின்னா், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க்கடன்கள், புதிய நீா்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
692 மனுக்கள் வரப்பெற்.
கூட்டத்தில் பெண்கள், வயதானவா்கள், கைக்குழந்தையுடன் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிகளும் பங்கேற்று மனு அளித்தனா்.
நலத்திட்ட உதவிகள்
மேலும் மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் கல்லூரியில் பயிலும் நான்கு மாற்றுத்திறனாளிகளுக்கு கேட்கும் கருவி பொருத்திய அறிதிறன் பேசிகளை மாவட்ட ஆட்சியா்
வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் மலாதி மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாற்றில், வருவாய்க் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற
இந்தக் கூட்டத்தில், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் வீட்டுமனைப் பட்டா கோரி 6 பேரும், நிலம் திருத்தம் கோரி ஒருவரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 4 பேரும், பட்டா மாற்றம் கோரி 19 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 14 பேரும், நில அளவீடு செய்யக் கோரி 5 பேரும், இதர மனுக்கள் 12 போ் உள்பட மொத்தம் 68 மனுக்கள் அளித்திருந்தனா்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் கலந்துகொண்டனா்.
