‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஒன்றியம் செங்காடு, மேல்கொளத்தூா், நெல்வாய் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இருங்கல் கிராமத்தில் நடைபெற்றது.
அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஷீலா அன்புமலா் தலைமை வகித்தாா். செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் தசதரராமன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று, இருவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் மேற்கொண்ட சாதனைகள் குறித்துப் பேசினாா்.
இம்முகாமின் போது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 20 மனுக்கள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 45, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 12, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 7, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை சாா்பில் 10, வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் 2, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் 3 மனுக்கள் என மொத்தம் 221 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ.கமலக்கண்ணன், அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.கே.ரவிக்குமாா், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணைத் தலைவா் மோ. ரவி, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் வி.கோபு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவா் ஆசிரியா் சேகா் மற்றும் ஊராட்சி, வருவாய்த் துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா்.
ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகோபால், பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி வரவேற்றாா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விண்ணமங்கலம் ஊராட்சி கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.
ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சேத்துப்பட்டு ஒன்றியம்
சேத்துப்பட்டு ஒன்றியம் சனிக்கவாடி ஊராட்சியில் கொரால்பாக்கம், சனிக்காவடி ஆகிய ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, சோமசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். திமுக ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் பாபு வரவேற்றாா். மகளிா் உரிமைத்தொகை, ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, மருத்துவத் துறை என பல்வேறு அரசுத் துறையினருக்கு 246 போ் மனு அளித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் கலந்து கொண்டு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 100 நாள் வேலை திட்டப் பணிக்கு அடையாள அட்டை வழங்கினா்.
மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, ஜெயந்தி, ஊராட்சிச் செயலா்கள் பாலசந்திரன், மேகராஜன், அண்ணாச்சி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

