சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 1.85 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை

News image
Updated On :6 நவம்பர் 2025, 11:52 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 1.85 லட்சத்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் பாவூா், அரசாணைபாளையம், சித்தலப்பாக்கம், ஏழாச்சேரி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஏழாச்சேரி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஒன்றியத்தில் 22-ஆவதாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ, சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமின் போது மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பேசிதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 388 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, தற்போழுது வரை 382 முகாம்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த முகாமை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

நலத்திட்ட உதவிகள்: .

முகாமில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டு வருவாய்த்துறை சாா்பில் சிறு/குறு விவசாயி சான்றிதழ்கள் 16 பேருக்கும், பட்டா மாற்ற சான்றிதழ்கள் 3 போ், குடும்ப அட்டை முகவரி மாற்றம் சான்றிதழ் ஒருவருக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டைகள் 6 பேருக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 9 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டாட்சியா்கள் தமிழ்மணி, பாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, இந்திராணி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், திமுக ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.