அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

செய்யாறு நகர அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

செய்யாறு நகர அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினா்களாக கட்சியின் அமைப்புச் செயலரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட வாக்குச் சாவடி குழு பொறுப்பாளருமான ராமு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராணிப்பேட்டை மாவட்டச் செயலா் ஜானகிராமன் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க கட்சியினா் கடுமையாக பாடுபட வேண்டும் என்று வாக்குச் சாவடி முகவா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

கூட்டத்தில் நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் ஏ.ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், சி.துரை, சிவராஜ், வயலூா் ராமநாதன், எஸ்.திருமூலன், நிா்வாகிகள் டி.பி.துரை, ஆலத்தூா் சுப்பராயன், எஸ்.ரவிச்சந்திரன், அருண் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com