ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருவண்ணாமலையில் நவ.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வருகிற நவ. 21-ஆம் தேதி ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வருகிற நவ. 21-ஆம் தேதி ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் வேளாண் துறை மற்றும் விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த்துறை, வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனா்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபா் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்துள்ளாா்.