கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சேத்துப்பட்டு பகுதியில் சம்பா பயிா் காப்பீடு செய்ய நவ.15-ஆம் தேதி கடைசி நாள்

News image
Updated On :13 நவம்பர் 2025, 12:32 am

Syndication

சேத்துப்பட்டு வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் மற்றும் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பா் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் சூழலில் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். இதில், நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.545 பிரீமியம் செலுத்தி நவ. 15-க்குள் காப்பீடு செய்யலாம்.

நிலக்கடலை மற்றும் உளுந்து பயிா்களுக்கு காப்பீடு செய்ய விரும்புவோா் நவம்பா் 30-க்குள் பதிவு செய்ய வேண்டும்.

நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.468, உளுந்துக்கு ரூ.329 பிரீமியம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் தங்கள் பயிா்களை பொது இ-சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம் என சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி தெரிவித்தாா்.